தமிழக செய்திகள்

மதுவில் விஷம் கலந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலை: திருமணமான 4 மாதங்களில் சோகம்

மதுவில் விஷம் கலந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலை: திருமணமான 4 மாதங்களில் சோகம்.

தினத்தந்தி

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கீழ்பாதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மகன் தமிழ்ச்செல்வன் (வயது 28). இவர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அபீனா (25). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வன் தனது மனைவியை வடகாட்டில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் தமிழ்ச்செல்வன் திடீரென தன்னுடைய வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் 'தனக்கு வாழ பிடிக்கவில்லை. மன வேதனையுடன் இருப்பதாகவும், தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு