தமிழக செய்திகள்

கோவை கார் வெடித்த வழக்கில் மேலும் 6 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல் - பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கோவையில் கார் வெடித்த வழக்கில் மேலும் 6 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது.

தினத்தந்தி

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் வெடித்த வழக்கில் ஜமேஷா முபின் (வயது 28), என்பவர் பலியானார்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மொத்தம் 9 பேரை கைது செய்து பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில் முகமது அசாரூதீன், அப்சர் கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பைரோஸ்கான் ஆகிய 5 பேரை ஏற்கனவே போலீஸ் காவலில் எடுத்து என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

விசாரணை முடிந்த நிலையில், மீதமுள்ள முகமது தல்லா, முகமது ரியாஸ், நவாஸ், முகமது தவுபிக், சேக் இதயதுல்லா, சனோபர் அலி ஆகிய 6 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ.அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர்.

இந்த மனுவானது நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், 6 பேருக்கும் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். மேலும் வருகிற 17-ந் தேதி மீண்டும் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரையும் ரகசிய இடத்தில் வைத்தும், கோவைக்கு அழைத்து சென்று விசாரிக்கவும் என்.ஐ.ஏ.அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து