தமிழக செய்திகள்

கால்நடை உதவி மருத்துவர் பதவி: தற்காலிகமாக தேர்வானவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2019-20-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிக்கான கால்நடை உதவி மருத்துவர் பதவி குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. 1,141 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 15 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

தேர்வில் வெற்றிபெற்று தற்காலிகமாக தேர்வான 1,942 பேர் தங்களுடைய சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்