தமிழக செய்திகள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு..!

ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்வுத்துறை வாரியம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவும் காரணத்தால் இந்த தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்