தமிழக செய்திகள்

கோழிப்பண்ணையில் கோர தீ விபத்து - 4 ஆயிரம் கோழிகள் கருகின

இன்று அதிகாலை கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோழிப்பண்ணை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

தினத்தந்தி

கடலூர்,

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரகிள்ளையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் கோழிப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை அவரது கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோழிப்பண்ணை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கிருந்த சுமார் 4 ஆயிரம் கோழிகள் தீயில் பரிதாபமாக கருகின.

இது குறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்