தமிழக செய்திகள்

கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் தொடங்கிய மின் உற்பத்தி

முதல்கட்டமாக 360 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதலாவது அணு உலையில் கடந்த 1-ந்தேதி திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து முதலாவது அணு உலையில் தொழில்நுட்ப கோளாற சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.நேற்று காலையில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. முதல்கட்டமாக 360 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து