தமிழக செய்திகள்

ரெயிலில் அடிபட்டு கர்ப்பிணி சாவு

உளுந்தூர்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கவுரி (வயது 26). இவருக்கும் ஏமம் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கும் திருமணம் ஆகி 5 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் 3 மாத கர்ப்பமான கவுரி தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கவுரி கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே கவுரி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு