தமிழக செய்திகள்

சில்லரை கேட்பது போல் நடித்துமூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு:மர்ம நபர்கள் கைவரிசை

தேனி அருகே சில்லரை கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் தங்க சங்கிலிய பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

தேனி அருகே பழனிசெட்டிபட்டி சுகதேவ் தெருவை சேர்ந்த ராமசாமி மனைவி சரஸ்வதி (வயது 70). இவர், டி.பி.என். சாலையில் பெட்டிக்கடை வைத்து வாழைப் பழங்கள் விற்பனை செய்து வருகிறார்.

கடந்த 25-ந்தேதி மாலையில் இவர் தனது கடையில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் சரஸ்வதியிடம் ரூ.500 கொடுத்து சில்லரை கேட்டார். உடனே சரஸ்வதி பக்கத்தில் உள்ள கடைக்கு சில்லரை வாங்கச் சென்றார். அப்போது மற்றொரு நபர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி