தமிழக செய்திகள்

சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதி அசோக்குமார் தூக்கு போட்டு தற்கொலை

சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதி அசோக்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

சேலம்,

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக் குமார். இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17 வயது பள்ளி மாணவியை அசோக்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் அசோக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அசோக்குமாருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இவரது ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில் விரக்தியடைந்த அசோக்குமார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு