தமிழக செய்திகள்

கோவை மத்திய சிறையில் கைதி திடீர் சாவு

கோவை மாவட்டம் காரமடை, பொன்னிபாளையம், சக்தி நகரை சேர்ந்த ஒரு முதியவர் போக்சோ வழக்கில் தண்டனை பெற்று மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

தினத்தந்தி

கோவை மாவட்டம் காரமடை, பொன்னிபாளையம், சக்தி நகரை சேர்ந்த ரங்கசாமி (வயது 64), போக்சோ வழக்கில் தண்டனை பெற்று மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 2024-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வரும் அவருக்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

வலியால் துடித்த அவரை உடனடியாக சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை