தமிழக செய்திகள்

அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சிறைத்துறை பணியாளர்கள் குழந்தைகளுக்கு பரிசுத்தொகை

அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சிறைத்துறை பணியாளர்கள் குழந்தைகளுக்கு பரிசுத்தொகையை சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி வழங்கினார்.

தினத்தந்தி

10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறைத்துறை பணியாளர்களின் குழந்தைகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் சென்னை சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறைத்துறை பணியாளர்களின் 20 குழந்தைகளுக்கு சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

அரசு பொதுத்தேர்வில் முத்திரை பதித்த சிறைத்துறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது சிறைத்துறை வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், ஆ.முருகேசன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு