தமிழக செய்திகள்

சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கு பரிசு

சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினத்தந்தி

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நேற்று முன்தினம் ஜோலார்பேட்டையில் நடந்தது. இதில் 328 மாணவர்களும், 218 மாணவிகளும் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளில் 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டு முதல் 10 இடங்களை பெற்ற 60 மாணவ, மாணவிகள் தேர்ந்த்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு நேற்று பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவகத்தில் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி 60 மாணவ மாணவிகளுக்கு பரிசுதொகையை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் உமாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை