தமிழக செய்திகள்

பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பெரியார் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி கடந்த 17-ந் தேதி நடத்தப்பட்டது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த இந்த போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் கொசவப்பட்டி புனித வளனார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி மோகனப்பிரியா முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர் டிக்சன் 2-ம் இடமும், பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக்கல்லூரியில் முதுகலை வணிகவியல் 2-ம் ஆண்டு படிக்கிற மாணவர் நாகஅர்ஜூன் 3-ம் இடமும் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் முதலிடம் பிடித்த மாணவி மோகனப்பிரியாவுக்கு ரூ.5 ஆயிரம், சான்றிதழும், 2-ம் இடம் பிடித்த மாணவன் டிக்சனுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் சான்றிதழ், 3-ம் இடம் பிடித்த மாணவன் நாக அர்ஜூனுக்கு ரூ.2 ஆயிரம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை