தமிழக செய்திகள்

வளசரவாக்கத்தில் வீட்டில் விபசாரம்; கணவன்-மனைவி கைது

சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் வைத்து விபசாரம் நடத்திய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக வளசரவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று குறிப்பிட்ட அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் அங்கு பெண்களை அடைத்து வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது.

இதையடுத்து விபசாரம் நடத்தியதாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிலோபர்தி சுதாகர் (வயது 46), அவருடைய மனைவி இந்து (32) மற்றும் கிண்டியை சேர்ந்த சீனிவாசன் (25), ராஜ்குமார் (47) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து