தமிழக செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

பெரம்பூர்,

சென்னை ஆர்.கே.நகர், 41-வது வார்டு, எழில்நகர் அடுத்த அன்னை சத்யா நகரில் மேம்பால பணிக்காக தற்காலிக சாலை அமைக்கும் வேண்டி இருந்தது. இதற்காக சாலையோரம் இருந்த சில ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக நேற்று காலை பொக்லைன் எந்திரத்துடன் வந்து அந்த வீடுகளை இடித்து அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகள் வந்த வாகனங்களை சிறை பிடித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அங்கு வந்த ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசரையும் முற்றுகையிட்டு தங்கள் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கொடுங்கையூர் போலீசார் பாதுகாப்புடன், 6 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்