தமிழக செய்திகள்

திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தினத்தந்தி

காவேரிப்பாக்கம்

திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 80-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பஜார் வீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் அதன் வகைகள் பற்றியும் எடுத்து கூறினர்.

தொடர்ந்து வளம் மீட்பு பூங்காவிற்கு மாணவர்கள் சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை ஆகியவற்றை எவ்வாறு பிரிப்பது என்பது குறித்து கேட்டறிந்தனர்.

பின்பு மாணவர்கள் தங்கள் வீடுகளில் இதனை பின்பற்றுவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் காவேரிப்பாக்கம் பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன், பேரூராட்சி செயல்அலுவலர் சரவணன், பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு