தமிழக செய்திகள்

திருட்டை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

நம்பேடு கிராமத்தில் திருட்டை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்- இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார், நம்பேடு கிராமத்தில் திருட்டை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் பேசிய இன்ஸ்பெக்டர் தமிழரசி இரவு நேரங்களில் கதவு, ஜன்னல்கள பூட்டி வைக்க வேண்டும். காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கக்கூடாது. வாகனங்களை வீட்டுக்குள் நிறுத்தி பூட்டி வைக்க வேண்டும்.

வெளியில் செல்லும்போது நகைகளை அதிகமாக அணிந்து வரக்கூடாது, பொதுமக்கள் கூடும் இடத்தில் பணத்தை எண்ணக்கூடாது.

புதிதாக யாராவது தெருக்களில் வந்தால் அவர்கள் யார் என்று கேட்க வேண்டும்.

சந்தேகம் ஏற்பட்டால் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வெளியூர் செல்லும்போது போலீஸ் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை