தமிழக செய்திகள்

அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம், பேரணிகளுக்கு தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம், பேரணிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

மதுரை,

கொரோனா தொற்று காலத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு போதிய கவனம் செலுத்தி, நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

எனவே அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம், பேரணிகளுக்கு தடை விதிக்க முடியாது என்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடைவிதிப்பது குறித்து உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை