தமிழக செய்திகள்

வழிப்பறி கும்பலை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

காப்புக்காடு பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடும் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் காப்புக்காடு பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தடுத்து நிறுத்தி கொள்ளையர்கள் வழிப்பறித்து வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் நாளுக்க நாள் அதிகரித்து வருகின்றது. இந்தகைய வழிப்பறி கும்பலை கைது செய்ய வலியுறுத்தி தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தை பொது மக்கள் முற்றுயையிட்டு போராட்டம் நடத்தினர்.பின்னர் வழிப்பறி கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உத்தரவு அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு