தமிழக செய்திகள்

அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா

அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

தினத்தந்தி

அறந்தாங்கி அருகே காயக்காடு கிராமத்தில் பூரண புஷ்கலாம்பிகை அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் 88 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. இதையடுத்து துவரடிமனையில் உள்ள குயவர் தெருவில் மண்ணால் செய்யப்பட்ட மதளை சிலைகளை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் சுமந்து கொண்டும், கிராமத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குதிரை, யானை, காளை, கருப்பசாமி போன்ற மண்ணினால் செய்த சிலைகளை சுமந்து கொண்டும் மேள தாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து