தமிழக செய்திகள்

ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

முஸ்லிம்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான் பண்டிகை. இந்த பண்டிகையை நேற்று நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் நேற்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அதிகாலையிலேயே எழுந்து புத்தாடைகளை அணிந்து பள்ளி வாசல்களுக்கு முஸ்லிம்கள் சென்று அங்கு நடந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். சிறுவர், சிறுமிகளும் விதவிதமான ஆடைகளை அணிந்தபடி தொழுகையில் கலந்து கொண்டனர்.

சிறப்பு தொழுகை

கடலூர் டவுன்ஹாலிலும் நேற்று காலை ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். பின்னர் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இதேபோல் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை லால்கான் தோப்பில் உள்ள ஈத்கா குத்பா பள்ளி வாசலிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் லால்பேட்டை பகுதியை சேர்ந்த திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் முதுநகர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு