தமிழக செய்திகள்

ராணிப்பேட்டை: அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு - பெரும் விபத்து தவிர்ப்பு

சுதாரித்து கொண்ட பேருந்து ஓட்டுநர், பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து கல்புதூர் பகுதி வரை செல்லக்கூடிய அரசு பேருந்து, முத்துக்கடை ஆட்டோ நகர் வழியாக 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்தின் இடதுபக்க பின்புற சக்கரமானது திடீரென கழன்று சாலையில் ஓடியதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட பயணிகள் பெரும் அச்சமடைந்து கூச்சலிட்டுள்ளனர். இதைக் கண்டு சுதாரித்து கொண்ட பேருந்து ஓட்டுநர், சாதூர்யமாக பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, வேறு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்