தமிழக செய்திகள்

ராணிப்பேட்டை: சொகுசு கார்களில் குட்கா கடத்தல் - ராஜஸ்தானைச் சேர்ந்த 4 பேர் கைது

சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 3 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற 3 சொகுசு கார்களில் குட்காவை கடத்திச் சென்ற கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து 3 சொகுசு கார்கள் மற்றும் அந்த கார்களில் கடத்தப்பட்ட 3 டன் குட்கா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து