தமிழக செய்திகள்

ரூ.16 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மீட்பு

பாலைவனநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

தினத்தந்தி

பாபநாசம்;

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திருப்பாலைத்துறையில் பாலைவனநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் சீதாலட்சுமி, அழகர் ஆகிய இருவரும் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்தனர்.இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் கவிதா முன்னிலையில், வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் ரூ.16 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள இடத்தை மீட்டு சீல் வைத்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.மீட்பு பணியில் கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், தனி தாசில்தார் சங்கர், ஆய்வாளர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து