தமிழக செய்திகள்

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டணம் குறைப்பு...!

கொரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு கொரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ. 400-ல் இருந்து ரூ.250-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.700-லிருந்து ரூ.400-ஆக குறைக்கப்பட்டுள்ளது

மேலும், குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.75-ஆகக் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு