தமிழக செய்திகள்

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைப்பு

நீர்வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு1,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தொடர் மழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி முழு கொள்ளளவை நெருங்கியது. நீர் தேக்கத்தின் பாதுகாப்பு கருதி கடந்த 9-ந் தேதி ஏரியிலிருந்து உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் பலத்த மழை இல்லாததால் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. நேற்று காலை பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியே வெளியாகி வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி ஆகும். நேற்று காலை 6 மணிக்கு நீர்மட்டம் 34.06 அடியாக பதிவாகியது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 38 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு வினாடிக்கு 1,520 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்