தமிழக செய்திகள்

முககவசம் குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - விஜயகாந்த் வேண்டுகோள்

முககவசம் குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக ஊரடங்கு அமலுக்கு மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், முககவசம் அணிந்து செல்போனில் செல்பி படம் எடுத்து டி.பி.யாக (டிஸ்பிளே பிக்சர்) பதிவிட்டும், அதை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும், முககவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரசாரத்தை தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்தவேண்டும்.

இதனை செய்யுமாறு தமிழக மக்களையும், தே.மு.தி.க. தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே மாதம் 3-ந்தேதி வரை அவரவர் செல்போனில் டிஸ்பிளே பிச்சராக வைத்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்