தமிழக செய்திகள்

விபத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பலி: தலைமறைவான வேன் டிரைவர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண்

விபத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பலி: தலைமறைவான வேன் டிரைவர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண்.

தினத்தந்தி

திண்டுக்கல்,

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த கனகராஜ் (வயது56) கடந்த 22-ந்தேதி அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த ஒரு வேன் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் கனகராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தை தொடர்ந்து தலைமறைவான வேன் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில், இந்த விபத்தை ஏற்படுத்தியதாக கரூரை அடுத்த குன்னுடையகவுண்டன்பட்டியை சேர்ந்த வேன் டிரைவர் சுரேஷ் (29) என்பவர் திண்டுக்கல் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு லலிதாராணி முன்னிலையில் நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து சுரேசை, வருகிற 30-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும், அதன்பிறகு கரூர் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படியும் மாஜிஸ்திரேட்டு லலிதாராணி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் சுரேஷ் அடைக்கப்பட்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு