தமிழக செய்திகள்

சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பு

சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தினத்தந்தி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி ஆகும். இதனுடைய மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி கொண்டதாகும். இந்த ஏரியில் நேற்று நிலவரப்படி 2,173 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

இந்த நிலையில் 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நேற்றைய நிலவரப்படி 674 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது. சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு நேற்று வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதகுகள் வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் புழல் ஏரி கால்வாய் வழியாக புழல் ஏரியை வந்தடைகிறது. புழல் ஏரியில் இருந்து தினந்தோறும் 159 கன அடி தண்ணீர் சென்னை குடிநீருக்காக வழங்கப்பட்டு வருகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு