தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரண உதவி

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரண உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

தினத்தந்தி

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர். இவ்வாறு வரப்பெற்ற 325 மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் வருவாய்த்துறையின் மூலம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ், மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகைக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், துணை கலெக்டர் மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து