தமிழக செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வள்ளிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தினத்தந்தி

வள்ளிமலை

காட்பாடி அருகே வள்ளிமலை சாலையில் இருந்து பொன்னை வரை நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் காட்பாடியில் இருந்து பொன்னை வரை உள்ள சிறு தரைப்பாலங்களை பெரிய தரைப்பாலங்களாக அகலப்படுத்தும் பணியும் நடைபெறுகிறது.

இதனால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் சாலைகளின் ஓரங்களில் உள்ள மின் கம்பங்கள் மாற்றி அமைத்தனர். மேலும் சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வந்தது.

அதனைத்தொடர்ந்து சாலைகளின் இருபக்கங்களிலும் சாலை விரிவாக்கத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன..

இதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வள்ளிமலை தேரடி பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை இன்று பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்