தமிழக செய்திகள்

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உடனே அகற்ற வேண்டும், மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் உரிய அனுமதி பெறாமல் அமைக்கப்படும் விளம்பரப் பலகைகள்-பதாகைகளை அகற்ற பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு கடந்த 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வை மேற்கொண்டது. அப்போது உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 23 விளம்பரப் பலகைகள் மற்றும் 70 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும் சென்னையில் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள்-பதாகைகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்றிட வேண்டும். மீறும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்