தமிழக செய்திகள்

கிணற்றில் தத்தளித்த மிளா மீட்பு

விக்கிரமசிங்கபுரம் அருகே கிணற்றில் தத்தளித்த மிளா மீட்கப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோட்டைவிளைபட்டியில் தனியாருக்கு சொந்தமான கிணறு ஒன்றில் மிளா தவறி விழுந்து உயிருக்கு போராடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின்படி வனவர் பிரபாகரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வேட்டை தடுப்பு காவலர்கள் வேல்ராஜ், சுதாகர், மனோஜ் ஆகியோர் சென்றனர். அங்கு சுமார் 3 வயதுடைய பெண் மிளா உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை அறிந்த அவர்கள் உடனடியாக மிளாவை பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஆம்பூர் பீட் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு