தமிழக செய்திகள்

ஐ.நா. சபையில் கொண்டுவரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

“இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த தமிழினத்துக்கு எதிரான போரில் 1 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை படுகொலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று பா.ம.க. உள்பட கட்சிகளும், உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இலங்கை போரில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு கடந்த 2014-ம் ஆண்டில் உத்தரவிடப்பட்டது. விசாரணையில், போர்க்குற்றங்கள் நடந்தது உறுதியானது.

இந்தநிலையில் இலங்கை போர்க்குற்றம் குறித்த நீதிமன்ற விசாரணைக்கு காலவரையறை நிர்ணயிக்கக் கோரும் தீர்மானத்தை ஜெனிவாவில் நேற்று முன்தினம் தொடங்கிய ஐ.நா. மனித உரிமை பேரவையின் 40-வது கூட்டத்தில் கொண்டு வர இங்கிலாந்து, கனடா, மாசடோனியா, ஜெர்மனி, மாண்டநெக்ரோ ஆகிய 5 நாடுகள் கூட்டாக அறிவித்திருக்கின்றன. அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் இந்த நாடுகளால் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு