தமிழக செய்திகள்

அதிகரிக்கும் கோடை வெப்பம்: தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்

காலையில் விரைவாக பணியை தொடங்கி, மதிய வேளையில் இடைவேளை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கத்தை விட பகலில் 3 டிகிரி முதல் 5 டிகிரி வரையிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. பகலில் கொளுத்தும் வெயிலில் அனல் காற்று வீசியதால் பெரும்பாலானவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு தேவையான உரிய வசதிகளை செய்து தருமாறு தொழிற்சாலைகள், கட்டடப்பணி, கல்-குவாரி, சாலை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

காலையில் விரைவாக பணியை தொடங்கி, மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும்; மாலையில் வெயில் குறைந்த பிறகு பணிகளை தொடங்க வேண்டும். பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். வெப்பம் அதிகமான துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு