தமிழக செய்திகள்

வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் ரோடு ரோலர்- பஸ் மோதல்; 10 பேர் காயம்

வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் ரோடு ரோலர்- பஸ் மோதலில் 10 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் நோக்கி தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு 2 பஸ்கள் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. படப்பை வஞ்சுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்த போது தனியார் பஸ்கள் ஒன்றுக்கொன்று முந்தி செல்ல முயன்றன. அப்போது அதே சாலையில் பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த ரோடு ரோலர் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த 10 பேர் காயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது பின் தொடர்ந்து வந்த மற்றொரு பஸ் தடுப்புச்சுவரின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து சம்பவத்தால் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு