தமிழக செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தேனியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தினத்தந்தி

தேனியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மதுரை சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு இந்த ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தொடங்கி வைத்தார். முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். பழைய பஸ் நிலையம், நேரு சிலை சிக்னல் வழியாக பங்களாமேடு பகுதியில் ஊர்வலம் நிறைவடைந்தது. இதில், தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வரலட்சுமி, சுவாமிநாதன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொருளாளர் பழனியப்பன், பள்ளி செயலாளர் பாலசரவணக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து