தமிழக செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஆலங்காயத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி வழிகாட்டுதலின்படி, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், போக்குவரத்து விதிகள் குறித்தும் ஊர்வலம் நடைபெற்றது. ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி ஆலங்காயம் கில்மேன் ரோடு வரை சன்றது. ஊர்வலத்தின்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT