தமிழக செய்திகள்

சாலை பணியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்

சாலை பணியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தினத்தந்தி

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட என்ஜினீயர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தின் சார்பில் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடந்த இயக்கத்தின் போது மாவட்ட செயலாளர் ஜெயசீலன் கோரிக்கையை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் ஹபிபுல்லா இயக்கத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். இந்த இயக்கத்தின் போது சாலை பணியாளர்கள் 41 மாத பணிநீக்க காலம் பணிக்காலமாக மாற்றப்படும் என முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் லியாக்கத் அலி சிறப்புரையாற்றினார். மாநில அரசு ஊழியர் சங்க முன்னாள் துணை தலைவர் கண்ணன் நிறைவுரையாற்றினார். முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் ஆழ்வார் நன்றி கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்