தமிழக செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்; சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

தினத்தந்தி

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் பல்வேறு திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். மேலும் கோட்டூர் ஆவாரம்பட்டியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார். இது தொடர்பாக எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்