தமிழக செய்திகள்

திருவாரூரில் கனமழையால் நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை

வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாத காரணத்தால் விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

திருவாரூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

குறிப்பாக நன்னிலம் அருகே உள்ள கிராமப் பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாத காரணத்தால் விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதாகவும், இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு