தமிழக செய்திகள்

குடியாத்தம் அருகே சாமி சிலைகள், உண்டியல் திருட்டு

குடியாத்தம் அருகே சாமி சிலைகள், உண்டியலை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

தினத்தந்தி

குடியாத்தத்தை அடுத்த தாட்டிமானபல்லி பஸ் நிறுத்தம் அருகே அங்காளபரமேஸ்வரி, நாகாலம்மன் புற்றுக் கோவில் உள்ளது. குடியாத்தம்-சித்தூர் சாலையில் அமைந்துள்ளதால் இந்த வழியாக செல்பவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள். இந்த நிலையில் கோவிலில் இருந்த 1 அடி உயர பித்தளையாலான நாகாலம்மன் சிலை, சிறிய பித்தளை பிள்ளையார் சிலை, பித்தளை விளக்குகள், மணி மற்றும் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் பரதராமி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் திருட்டு நடைபெற்ற கோவிலில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு