தமிழக செய்திகள்

புது மாரியம்மன் கோவிலில் சங்காபிஷேகம்

பரமத்திவேலூரில் புது மாரியம்மன் கோவிலில் சங்காபிஷேகம் நடைபெற்றது.

தினத்தந்தி

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவிலில் 46-ம் ஆண்டு சண்டிகா பரமேஸ்வரி மகாஹோமம் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 19, 20-ந் தேதி சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து 108 கலச பூஜையும், சிறப்பு அபிஷேகமும், பிரசாதம் வழங்குதலும், 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 108 திருவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். நேற்றுமுன்தினம் காலை மகாலட்சுமி அம்சமான வலம்புரி மற்றும் மகாவிஷ்ணு அம்சமான இடம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அதனை தொடர்ந்து மாலை சப்தசதி பாராயணம் நடைபெற்றது. நேற்று காலை கணபதி பூஜை, ஸ்ரீ சண்டிகா பரமேஸ்வரி ஹோமம் மற்றும் அம்பிகைக்கு விசேஷ அலங்காரமும் நடைபெற்றது. மதியம் மகா தீபாராதனையும், சுமங்கலி பூஜை மற்றும் கன்னிகா பூஜையும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் பேட்டை சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவில் சண்டிகா பரமேஸ்வரி மகாஹோம விழா குழுவினர், கட்டளைதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை