தமிழக செய்திகள்

தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

சீர்காழியில், தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் குறைந்த விலையில் உணவு வகைகள் கிடைப்பதால் காலை மதியம் இருவேளைகளிலும் ஏழை-எளிய மக்கள் உணவுகளை வாங்கி உட்கொண்டு வருகின்றனர். இந்த உணவகம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் மற்றும் புழுக்கள் உள்ளதால் முகம் சுளிக்க வைக்கிறது.

சுகாதார சீர்கேடு

இதன்காரணமாக இந்தப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, அம்மா உணவகம் அருகே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி பிளீச்சிங் பவுடர் தெளித்து சுகாதார பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்