திருப்பத்தூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு பகுதிகளிலிருந்து ஒன்று கூடினர். அவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஏலகிரி மலையில் மர்ககன்றுகளை நட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவினை தொடங்கி வைத்தார். இதனையடுத்து முன்னாள் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.