தமிழக செய்திகள்

திண்டுக்கல், பழனியில் சாரல் மழை

திண்டுக்கல், பழனியில் சாரல் மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு பரவலாக பெய்தது. கடந்த ஒருவாரமாக மழை ஓய்ந்திருந்தது. இரவில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் அடித்தது. இந்தநிலையில் திண்டுக்கல்லில் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 5 மணி அளவில் சாரல் மழை பெய்தது. அதன்பிறகு விட்டுவிட்டு பெய்த சாரல் மழை இரவு வரை நீடித்தது.

இதேபோல் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் இரவு 7 மணி அளவில் சாரல் மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் இரவில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை, நத்தம், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்