தமிழக செய்திகள்

பள்ளி செல்லா மாணவர்கள் கணக்கெடுப்பு பணி

திருமக்கோட்டையில் பள்ளி செல்லா மாணவர்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது.

தினத்தந்தி

திருமக்கோட்டை:

திருமக்காட்ட பகுதியில் பள்ளி செல்லா மாணவர்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் தட்டாங்கோவில் பகுதியில் வீடுகள் ஏதும் இன்றி சாலைப் பகுதியில் வசித்து வரும் கணவரை இழந்த பெண்ணின் மகள் மற்றும் பெற்றோரை இழந்து பாட்டியுடன் வசித்து வந்த ஒரு சிறுவன் ஆகிய 2 பேரும் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தது தெரிய வந்தது. இவர்கள், மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் தட்டான் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு சேர்க்கப்பட்டனர். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வைரமுத்து, தலைமை ஆசிரியை லதா, பள்ளி மேலாண்மை குழு தலைவி பரமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்