தமிழக செய்திகள்

தேசிய கொடிகளால் குழந்தைகள் பாதுகாப்பு எண்ணை உருவாக்கி பள்ளி மாணவி சாதனை

தேசிய கொடிகளால் குழந்தைகள் பாதுகாப்பு எண்ணை உருவாக்கி பள்ளி மாணவி சாதனை படைத்தார்.

தினத்தந்தி

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டியும், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டியும் திருச்சி கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி சாய்னா நேற்று சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சாய்னா, குழந்தைகள் பாதுகாப்பு எண்ணான 1,098-ஐ தேசிய கொடிகளை கொண்டு உருவாக்கினார். இதில் 100 தேசிய கொடிகளை பயன்படுத்திய அவர் 7 நிமிடங்களில் 1098 என்ற எண்ணை உருவாக்கி சாதனை படைத்தார். குழந்தைகளின் பாதுகாப்பு எண்ணான இந்த எண்ணை பிரபலப்படுத்தும் வகையிலும், இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த சாதனை நிகழ்ச்சி நடந்தது. சாய்னா ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியின் சாதனையை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர், சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை