தமிழக செய்திகள்

பள்ளி ஆசிரியர்கள்- குடும்பத்தினருக்கு தடுப்பூசியில் முன்னுரிமை

பள்ளி ஆசிரியர்கள்- குடும்பத்தினருக்கு தடுப்பூசியில் முன்னுரிமை பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு.

சென்னை,

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை ஏறத்தாழ 2.80 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்துக்கு கூடுதலாக 14.57 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 2.17 லட்சம் கோவேக்சின் தடுப்பூசியும் வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் தடுப்பூசிகளை 2-ம் தவணை போடுபவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்க முன்னுரிமை தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT