தமிழக செய்திகள்

கூடுதல் கலெக்டரின் ஸ்கூட்டர் திருட்டு

கூடுதல் கலெக்டரின் ஸ்கூட்டர் திருட்டு போனது

தினத்தந்தி

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா கடந்த 28-ந் தேதி தனது ஸ்கூட்டரை மருத்துவக்கல்லூரி சாலை நடராஜபுரம் காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே நிறுத்திவிட்டு, டென்னிஸ் விளையாடுவதற்காக சென்றார். விளையாடி முடித்த பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. யாரோ ஸ்கூட்டரை திருடிச் சென்று விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் சுகபுத்ரா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே மோட்டார் சைக்கிள்கள் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?